வலைப்பூவிற்கு வருகைதந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன்!!!

Thursday, January 27, 2011

நட்பு கவிதைகள்!!!

      

       உயிர்


  • நண்பனுக்காக உயிரை குடுப்பது சுலபம் , ஆனால்

    உயிரை குடுக்கும் அளவுக்கு " நண்பன் " கிடைப்பது கஷ்டம்.

    

  • நிழல் கூட வெளிச்சம் உள்ள வரை தான் நம்மோடு வரும்
    உண்மையான " நட்பு " உயிர் உள்ளவரை நம்மோடு வரும் 



  • காரணம் இல்லாமல் கலைந்து போக இது கனவும் இல்லை ,
    காரணம் சொல்லி பிரிந்து போக இது காதலும் இல்லை, 

  " உயிர் " உள்ளவரை தொடரும் உண்மையான அன்பு   
  
    அதுதான் "நம் நட்பு " 


    நட்பு

நட்பை நாம் நேசிக்கும்போது...!
"எத்தனையோ கவிதகைள்
என்னால் எழுதப்பட்டிருக்கின்றன...!
நண்பா,
உனக்கொரு கவிதை நான்
உருவாக்கும்போதுதான் அது
ஒளிவிட்டு பிரகாசிக்கின்றது....!
எத்தனையோ முகங்கள்,
எவ்வளவோ மொழிகள்,
எல்லாம் ஒன்றிணைகின்றன
நட்பை நாம் நேசிக்கும்போது...!
எத்தனையோ துன்பங்கள்,
எவ்வளவோ கஷ்டங்கள்,
எல்லாம் மறைகின்றன
நட்பை நாம் யாசிக்கும்போது...!
தூய்மையான உள்ளத்தில்
தோன்றுகின்ற நட்பெல்லாம்
துதிக்கப்படுகின்றன...!
என்றும், 
உன்னதமாய் மதிக்கப்படுகின்றன...!
எங்கேயோ நீயும்....
இங்கே நானும்....
இணைந்தது எப்படியோ..?
காதலா இல்லை?
காமமா இல்லை?
கள்ளமற்ற நட்புதான்...!
இதை கடைசிவரை நான்
காப்பாற்றுவேன் என்று கூறி,
உனது நட்பை வாழ்த்தி 

வணங்குகிறேன்......



No comments:

Post a Comment